மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஹன்சிகா. அவருக்கும் அவரது பிசினஸ் பார்ட்டனரான சோஹைல் கத்துரியா என்பவருக்கும் நாளை டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முன்டோட்டா கோட்டை மற்றும் அரண்மனையில் சிந்தி முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது.
திருமணத்திற்கு முன்னதாக நடைபெறும் மெஹந்தி நிகழ்வுகள் நேற்று நடைபெற்றுள்ளது. அதில் வழக்கமான 'சங்கீத்' நிகழ்வுகளாக இல்லாமல், சுபி என்றழைக்கப்படும் முஸ்லிம் முறைப்படியான இசை நிகழ்வுகள் நேற்றைய சிறப்பம்சமாக இருந்துள்ளது. அதில் முஸ்லிம் முறைப்படியான ஆடை அலங்காரங்களை ஹன்சிகா செய்திருந்தார். அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் மணமகன் சோஹைல் அவரது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இன்று இரவு திருமணத்திற்காக வந்துள்ள விருந்தினர்களுக்கு பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. திருமணம் முடிந்து சில நாட்கள் ஜெய்ப்பூரிலேயே தங்கியிருக்கும் திருமண ஜோடி பின்னர் மும்பை வர உள்ளார்களாம். அங்கு பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.