ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பிக்பாஸ் வீட்டில் தனது அதிகாரத்தை தொடர்ந்து நிலைநாட்டி வரும் அசீம், இந்த வாரம் அத்துமீறி அமுதவாணனை பிடித்து தள்ளிவிட்டார். இதனால் இருவருக்குமிடையே பெரிய அளவில் வாக்குவாதம் நடந்தது. தொடர்ந்து பேசிய அசீம் 'நெஞ்சில உரம் இருந்தா என்ன அடிடா' என ஆவேசமாக பேசி கத்தினார். அசீமின் இந்த செயலை பலரும் தற்போது கண்டித்து வருவதுடன், அசீமிற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
இதற்கிடையில், கேமரா முன் பேசிய அசீம் 'நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போகனும். வீடே எனக்கு எதிரா இருக்கும் போது தொடர்ந்து இந்த விளையாட்ட விளையாட நான் விரும்பல' என கூறியுள்ளார். மேலும், அமுதவாணனை அடித்தது குறித்து பேசிய அசீம் 'அந்த சண்டை கோபத்தால நடந்தது. அதை தயவு செஞ்சு டெலிகாஸ்ட் பண்ணிடாதீங்க ப்ளீஸ். அது டெலிகாஸ்ட் ஆச்சுனா ரொம்ப பெரிய விஷயமா மாறிடும். என்னோட பெயர் கெட்டு போய்டும்' என பிக்பாஸிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.