பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
மலையாளத்தில் 2015ல் வெளியான பிரேமம் என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்துவிட்டு, அதன்பின்7 ஆண்டுகள் படம் இயக்காமல் இருந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு தற்போது இயக்கியுள்ள படம் 'கோல்டு'. பிரித்விராஜ், நயன்தாரா ஜோடி என்கிற புது காம்பினேஷனில் இந்தப்படம் உருவாகி உள்ளது. கடந்த ஓணம் பண்டிகைக்கே வெளிவந்திருக்க வேண்டிய இந்தப்படம் பல்வேறு காரணங்களால் தாமதமாகி ஒருவழியாக இன்று( டிச-1) வெளியாகி உள்ளது.
மலையாளம் தமிழ் என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது. அதேசமயம் கேரளாவில் இன்று படம் வெளியானாலும் தமிழகத்தில் ஒரு நாள் தள்ளி நாளை (டிச-2) தான் வெளியாக இருக்கிறது. தமிழிலும்கூட வியாழன் அன்றே படங்கள் வெளியாகும் வழக்கம் இருந்தாலும், இந்த வாரம் வெளியாகும் படங்கள் அனைத்துமே வெள்ளிக்கிழமை வெளியாக இருப்பதால் அவற்றுடன் சேர்ந்து கோல்டு படமும் அதே தேதியில் வெளியாகிறது.