பிளாஷ் பேக்: கட்டபொம்மனை கண்டு மிரண்ட தமிழ் சினிமா | காதலிக்க நேரமில்லை சந்திராவின் ரீ-என்ட்ரி! எந்த சீரியல் தெரியுமா? | கையில் கட்டுடன் கேன்ஸ் புறப்பட்ட ஐஸ்வர்யா ராய் | தாமு ஏன் வெங்கடேஷ் பட்டுடன் வரவில்லை?: புதிய தகவல் | கருப்பு பணத்தை மாற்றுகிறேனா? விமர்சனத்திற்கு பாலா பதில் | 'ஹுக்கும்' பாடலை மறப்பீர்கள் : 'தேவரா' தயாரிப்பாளர் | கங்கனா ரணாவத் சொத்து மதிப்பு எவ்வளவு? | ஏ.எல். விஜய், மாதவன் கூட்டணி பட குறித்து புதிய தகவல் இதோ! | காதலாகி, கசிந்துருகி… பிரிவாகி… - தமிழ் சினிமா பிரபலங்களின் பிரிவுகள் | யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ்? |
சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. லைக்கா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் வருகின்ற டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது .
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடலான 'அப்பத்தா பாடல்' வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து பணக்காரன் என தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலையும் வடிவேலு தான் பாடி உள்ளார். அவரது நய்யாண்டி பேச்சு ஸ்டைலில் இந்த பாடல் உருவாகி உள்ளது. அவருடன் சந்தோஷ் நாராயணனும் இணைந்து பாடி உள்ளார். விவேக் எழுதி உள்ளார். பாடல் வெளியான 16 மணிநேரத்தில் 21 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. தொடர்ச்சியாக ஒரே படத்தில் வடிவேலு இரண்டு பாடல்களை பாடி உள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.