முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
இந்தியாவுக்கு சுதந்திரம் கேட்டு மகாத்மாக காந்தி அகிச்சை வழியில் போராடிய போது, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி ஆயுதம் ஏந்தி போராடியவர் சுபாஷ் சந்திர போஸ். அந்த ராணுவத்தில் பெண் உளவாளியாக இருந்தவர் நீரா ஆர்யா. அவரது வாழ்க்கை இப்போது நீரா ஆர்யா என்ற பெயரிலேயே திரைப்படமாக தயாராகிறது. இதில் நீரா ஆர்யாவாக கன்னட நடிகை ரூபா அய்யர் நடிக்கிறார். அவரே படத்தை இயக்கவும் செய்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நாம் கொண்டாட வேண்டிய ஒரு தேசப்போராளியின் சரித்திர கதையில் நான் நடிக்கிறேன். ஐஎன்ஏவின் முதல் பெண் உளவாளி நீரா. அவரது கணவர் ஆங்கிலேயர்களுக்கு சேவை செய்த போதிலும், அவர் நாட்டிற்காக போராடினார். சுபாஷ் சந்திரபோஸின் இருப்பிடம் பற்றிய தகவலை அவர் தெரிவிக்க மறுத்ததால் அவரது மார்பகங்கள் வெட்டப்பட்டன. தேசத்துக்காக தன் கணவனையே கொன்றவர். ஆனால் தன் கடைசி காலத்தில் பூ விற்று வாழ்க்கை நடத்தியவர்.
ஒரு பத்திரிகையாளரின் பார்வையில் படத்தின் கதை சொல்லப்படும். 1940களில் நடந்த உண்மையான சம்பவங்கள் காட்சியாக விரியும். இதற்காக நிறைய ஆய்வுகள் செய்து திரைக்கதை அமைத்துள்ளேன். சம்பவம் நடந்த இடங்களிலேயே படப்பிடிப்பும் நடத்தப்படுகிறது. லண்டன் மற்றும் அந்தமான் சிறையில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. என்றார் ரூபா அய்யர்.
ரூபா அய்யர் சிறந்த இயக்குனருக்கான விருதை இரண்டு முறை கர்நாடக அரசிடம் பெற்றவர். இதுவரை 5 திரைப்படங்களை தயாரித்துள்ளார், 4 படங்களை இயக்கி உள்ளார். 20 விளம்பர படங்களை இயக்கி உள்ளார்.