படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே கன்னட திரைப்படங்கள் தங்களது வியாபார எல்லையை வைத்திருந்தன. ஆனால் கே ஜி எப் படத்தின் பான் இந்திய வெற்றி அதன்பிறகு கன்னட சினிமாவின் மீது மற்ற திரையுலகங்களின் பார்வையை திருப்பியது. அதைத்தொடர்ந்து வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் அதன் முதல் பாகத்தை விட மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பாலிவுட்டில் வெளியாகும் படங்களுக்கு சவால் விடும் அளவிற்கு மிகப்பெரிய அளவில் வசூலையும் குவித்தது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த நயன்தாரா திரைப்படம் கேஜிஎப் ஏற்படுத்தியது போன்று தென்னிந்திய திரையுலகிலும் பாலிவுட்டிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேஜிஎப் உருவாக்கி வைத்துள்ள சாதனைகளை இன்னொரு கன்னட திரைப்படம் முறியடிப்பதற்கு நீண்ட நாள் ஆகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது காந்தாரா திரைப்படம் கேஜிஎப் படத்தின் சில சாதனைகளை முறியடிக்க துவங்கியுள்ளது.
அந்தவகையில் இதற்கு முன்னதாக கர்நாடகாவில் வெளியான கேஜிஎப் படத்தின் முதல் பாகத்திற்கு 72 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. தற்போது இதுவரை காந்தாரா திரைப்படத்திற்கு அதைவிட மூன்று லட்சம் டிக்கெட்டுகள் அதிகமாக 75 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன என்று விநியோகஸ்தர்கள் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்ல கேஜிஎப் 2 திரைப்படத்திற்கு கர்நாடகாவில் மட்டும் 77 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது தான் மிகப்பெரிய சாதனையாக இருந்து வருகிறது. இன்னும் இரண்டு லட்சம் டிக்கெட்டுகளை தாண்டினால் காந்தாரா திரைப்படம் அந்த சாதனையையும் முறியடிக்கும் அளவிற்கு கிட்டத்தட்ட நெருங்கி வந்துள்ளது. இன்னும் சில நாட்கள் சென்றபிறகு தான் காந்தாரா இன்னும் என்னென்ன சாதனைகளை செய்திருக்கிறது என்பது முழுதாக தெரியவரும்.