சுந்தர்.சிக்கு முதல் ரூ.100 கோடி படமாக அமைந்த அரண்மனை 4 | அஜித்தை அடுத்தடுத்து இயக்க போகும் சிவா - மோகன் ராஜா | ‛இந்தியன் 2' முதல் பாடல் வெளியானது : ஜூன் 1ல் இசை வெளியீடு | சிம்பு 48வது படத்தில் இரண்டு பாலிவுட் ஹீரோயின்கள் | அதிரடி ஆக்ஷனுக்கு தயாராகும் சமந்தா | தக் லைப் கதையில் மணிரத்னம் செய்த அதிரடி மாற்றம் | அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜய் | கவின், நயன்தாரா இணையும் புதிய படம் | வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகும் மாஸ்டர் | சென்னையில் 3.5 கோடிக்கு 'போர்ஷே' கார் வாங்கிய நாக சைதன்யா |
இந்திய அளவில் ஹிந்தித் திரைப்படங்கள்தான் அதிக அளவிலான 100 கோடி வசூல் படங்களை வைத்துள்ளன. இதுவரையில் வெளிவந்த படங்களில் சுமார் 100 ஹிந்திப் படங்கள் 100 கோடி வசூலைப் பெற்ற படங்களாக உள்ளன. “பாகுபலி 2, கேஜிஎப் 2, டங்கல்' ஆகிய படங்கள் 1000 கோடி வசூலைப் பெற்ற படங்கள்.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் சில தென்னிந்திய மொழிப் படங்கள்தான் 100 கோடி வசூலைக் கடந்துள்ளன. தமிழில் 30 படங்களும், தெலுங்கில் 10 முதல் 15 படங்களும், மலையாளத்தில் 7 படங்கள் வரையிலும் 100 கோடி வசூலைக் கடந்துள்ளன. ஆனால், கன்னடத்தில் மிகக் குறைவாக 100 கோடி வசூலைக் கடந்த படங்களாக இருக்கின்றன.
'கேஜிஎப்' படத்தின் முதல் பாகம்தான் முதன் முதலில் 100 கோடி வசூலைக் கடந்த கன்னடப் படமாக அமைந்தது. அதற்குப் பிறகு இந்த ஆண்டில் வெளிவந்த கிச்சா சுதீப் நடித்த 'விக்ராந்த் ரோணா', மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நடிப்பில் வெளிவந்த 'ஜேம்ஸ்', ரக்ஷித் ஷெட்டி நடித்து வெளிவந்த '777 சார்லி', மற்றும் யஷ் நடிப்பில் வெளிவந்த 'கேஜிஎப் 2' ஆகிய படங்கள் 100 கோடி வசூலைக் கடந்த படங்களாக அமைந்தன.
இப்போது அந்த வரிசையில் 100 கோடி வசூலைக் கடந்த படமாக ரிஷாப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் செப்டம்பர் 30ல் வெளிவந்த 'காந்தாரா' படம் நேற்று 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. மிகச் சிறிய படமாக தயாராகி வெளிவந்த இந்தப் படம் ஆச்சரியப்படும் விதத்தில் வெற்றியைப் பெற்றுள்ளது. எப்படியும் ஓடி முடியும் போது இந்தப் படம் மொத்த வசூலில் 200 கோடியைக் கடக்கும் என சாண்டல்வுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கன்னட சினிமாவில் இந்த ஆண்டில் வெளிவந்த 5 படங்கள் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.