விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது | குழந்தையின் தாய் தற்கொலை : மனிதநேயம் இறந்து கொண்டிருப்பதாக நடிகை கல்யாணி ஆதங்கம் | 'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் | 5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் |
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ள செய்தியை அவர்கள் வெளியிட்டதில் இருந்து சோசியல் மீடியாவில் சிலர் அதை சர்ச்சை ஆக்கி வருகிறார்கள். குறிப்பாக வாடகைத்தாய் விவகாரத்தில் அவர்கள் விதியை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நேரத்தில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். அதில், ‛‛ஒரு கணவன் - மனைவிக்கு பெற்றோர் ஆவதை விட சந்தோஷமான விஷயம் வேறு எதுவும் கிடையாது. இரண்டு அழகான குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகி உள்ள நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு எனது வாழ்த்துக்கள். மேலும், லீகல் தெரியும், மெடிக்கல் தெரியும் என்று சில முட்டாள்கள் உங்களது பொன்னான நேரத்தை வீணாக்குவார்கள். நீங்கள் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்'' என்றும் தெரிவித்திருக்கிறார் வனிதா.