ஓராண்டாக நடந்த 'அமரன்' படப்பிடிப்பு நிறைவு : விரைவில் ரிலீஸ் அறிவிப்பு | இன்றும் டிரெண்ட்டில் நாட்டாமை ‛மிக்சர்' மாமா : யார் இவர்... - கேஎஸ் ரவிக்குமார் உடைத்த ரகசியம் | 27 ஆண்டுகளுக்கு பிறகு கஜோலுடன் இணையும் பிரபுதேவா | நேற்று 'மெய்யழகன்', இன்று 'வா வாத்தியார்' - கார்த்தி படங்களின் அப்டேட் | அமரன் படக்குழுவுக்கு பிரியாணி விருந்து அளித்த சிவகார்த்திகேயன் | மீண்டும் சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா | சிரஞ்சீவி படத்தில் இத்தனை இளம் நடிகைகளா? | தள்ளிப்போகும் தனி ஒருவன் 2? | ஜூலை மாதத்தில் துவங்கும் கலகலப்பு 3 படப்பிடிப்பு | தந்தையின் நண்பர்கள் புகைப்படம் பகிர்ந்து மம்முட்டி படத்திற்கு வாழ்த்து கூறிய சிபிராஜ் |
தற்போது ரஜினிகாந்த் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே ரஜினி அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் படங்கள் குறித்து தகவல்களும் வெளியாகி உள்ளன. ஏற்கனவே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவதாக ஒரு செய்தியும், அதன் பிறகு சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பதாகவும் இரண்டு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. என்றாலும் ஜெயிலர் படத்தை அடுத்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் ரஜினி நடிக்க போவதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த இரண்டு படங்களில் ரஜினியின் 170 வது படத்தை சிபி சக்ரவர்த்தியும், 171-வது படத்தை தேசிங்கு பெரிய சாமியும் இயக்குவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இரண்டு படங்கள் குறித்த தகவல்களை லைகா நிறுவனம் விரைவில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.