மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் | கண்ணப்பா படப்பிடிப்பை நிறைவு செய்த அக்சய் குமார் | ஹீரோக்களுக்கு எதிராக ஹீரோக்களே வசனம் பேசும் புதிய ட்ரெண்ட் | தனது வருங்கால மனைவியை மோகன்லாலுக்கு அறிமுகப்படுத்திய காளிதாஸ் | விஜய் மகன் படத்தில் நடிக்க அழைத்தது உண்மைதான் : கவின் | திடீரென கதை சர்ச்சையை கிளப்பிய கதாசிரியருக்கு நிவின்பாலி பட தயாரிப்பாளர் கண்டனம் | வேட்டைக்காரன், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மாவீரன் - ஞாயிறு திரைப்படங்கள் |
மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பிரபல வீணை இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் இசை நிகழ்ச்சி, இன்று (செப்.,25) சென்னையில் நடக்கிறது. இதற்காக 'எனது இதய வீணை' என்ற தலைப்பில், மாலை 6:30 மணியளவில், சென்னை, தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நிகழ்ச்சி நடத்துகிறார். நிகழ்ச்சியில், எஸ்.பி.பி.,யின் பழைய, புதிய என்று பிரபலமான பல பாடல்கள் பாடப்பட இருக்கிறது. ராஜேஷ் வைத்யாவுடன் பிரபலமான பல இசைக்கலைஞர்கள் கைகோர்த்து, நிகழ்வை சிறப்பிக்க உள்ளனர்.
ராஜேஷ் வைத்யா எனும் வீணைச்சக்ரவர்த்தி தன் மாயவிரல்களால், ஆசை வீணையின் தந்திகளை மீட்டி, அமரரான எஸ்.பி.பி.,யை மகிழ்ச்சிப்படுத்த இருக்கிறார். அந்த மகிழ்ச்சி அலையில் நீங்களும் நனையலாம். இந்த நிகழ்ச்சிக்கு, அனுமதி கட்டணம் உண்டு. மேலும் விபரங்களுக்கு 9884152200 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்நிகழ்ச்சியை தினமலர் நாளிதழும் இணைந்து வழங்குகிறது.