ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சினிமாவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு லட்சியம், கனவு இருக்கும். அதை அவர்கள் அடையும் போது அவர்களைச் சுற்றியுள்ளவர்களும் மகிழ்ச்சியடைவார்கள். அப்படி ஒரு சந்தோஷமல்ல, டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ஜெயம் ரவி குடும்பத்தினர். முதல் சந்தோஷம், மணிரத்னம் இயக்கத்தில் முதல் முறையாக நடிப்பது, 'பொன்னியின் செல்வன்' படத்தில் டைட்டில் ரோலில் நடிப்பது என ஜெயம் ரவிக்கு அமைந்துள்ளது. வரும் வாரம் செப்டம்பர் 30ம் தேதி அப்படம் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவின் மதிப்பு மிக்க ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இரண்டாவது சந்தோஷம் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா, தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவியை இயக்கியிருப்பது. அந்தக் கூட்டணியின் படமான 'காட் பாதர்' தெலுங்குப் படம் அக்டோபர் 5ம் தேதி வெளியாக உள்ளது. அதனால், இந்த வருட விஜயதசமி ஜெயம் ரவி குடும்பத்தினருக்கு டபுள் சந்தோஷத்துடன் மறக்க முடியாத ஒரு நாளாக அமையப் போகிறது.
தமிழில் 'பொன்னியின் செல்வன்' படமும், தெலுங்கில் 'காட் பாதர்' படமும் இந்த வருடத்தின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள்.
ஜெயம் ரவி, மோகன் ராஜாவின் அப்பா எடிட்டர் மோகன் ஒரு தயாரிப்பாளர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஜெயம் ரவியின் மாமியாரும் ஒரு தயாரிப்பாளர். ஜெயம் ரவி, மோகன் ராஜா சார்ந்த உறவினர்கள், குடும்பத்தார் அனைவருக்கும் இரண்டு படங்களும் வெற்றி பெற்றால் பெரும் சந்தோஷமாக அமையும்.