100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
சென்னையில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் மற்றும் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு ஈசிஆர் சாலையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சில தினங்களுக்கு முன்பு ரஜினியும், ஷாருக்கானும் நேரில் சந்தித்துக் கொண்டார்கள்.
இந்த நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு படப்பிடிப்பும், மகேஷ் பாபு நடிக்கும் அவரது 28வது படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இப்படி இருவரும் ஒரே ஸ்டுடியோவில் நடித்து வந்த போதும் இதுவரை அவர்கள் நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை. என்றாலும் விரைவில் விஜய்யும், மகேஷ் பாபுவும் நேரில் சந்திப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விஜய் தமிழில் நடித்துள்ள கில்லி, போக்கிரி உள்ளிட்ட பல படங்கள் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த படங்களின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.