மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழில் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா, ஹிந்தியில் குட்பை, மிஷன் மஜ்னு, அனிமல் என மூன்று படங்களில் நடித்து வருகிறார். இதில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்துள்ள குட்பை படம் அடுத்த மாதம் 7ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது அப்படத்தின் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அப்போது மீடியாக்களுக்கு அவர் அளித்த பேட்டியில் அல்லு அர்ஜுனுடன் நடிக்க இருக்கும் புஷ்பா- 2 படம் குறித்த ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் புஷ்பா- 2 படத்தின் வேலைகளை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்க போகிறேன். எனது கேரியரில் ஒரு முக்கியமான படமாக புஷ்பா அமைந்தது. ஹிந்தி படங்களில் கமிட்டாகி நான் நடித்து வந்த நேரத்தில் இப்படம் ஹிந்தியிலும் வெளியாகி வசூல் சாதனை செய்தது. அதனால் ஹிந்தியில் நடிக்கும் படங்கள் வெளியாவதற்கு முன்பே புஷ்பா மூலம் ஹிந்தி ரசிகர்களுக்கு பரிட்சயமாகி விட்டேன். அதனால் புஷ்பா-2 படத்தில் நடிப்பதில் கூடுதல் ஆர்வமாக இருக்கிறேன். இந்த இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுனின் மனைவி ஸ்ரீவள்ளியாக நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.