ஐஸ்வர்யா ராய்க்கு விரைவில் கையில் ஆபரேஷன் | தங்கலான் படம் ரிலீஸ் பற்றிய புதிய தகவல் | மே.29ல் வெளியாகும் ‛மழை பிடிக்காத மனிதன்' பட டீசர் | ஆகஸ்ட்டில் துவங்கும் ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு | கல்கி 2898 ஏடி - ரோபோவுக்கு டப்பிங் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | விஜய்க்கு ஜோடியாகும் சூர்யா பட நாயகி | திருவண்ணாமலை கோயிலில் நடிகை ரோஜா வழிபாடு | இனி, மாதம் ஒரு பெரிய படம் ரிலீஸ் உறுதி… | வெற்றிக் கோட்டைத் தொடுவாரா 'பி.டி. சார்' | சூரி பட விழாவிற்கு வரும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் |
மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக இயக்கி முடித்து விட்டார். இப்படத்தின் முதல் பாகம் 30ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகை அமலாபால் அளித்த ஒரு பேட்டியில், பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கு இரண்டு முறை வாய்ப்பு கிடைத்தும் தான் தவற விட்டு விட்டதாக தெரிவித்திருக்கிறார்.
அது குறித்து அவர் கூறுகையில், ‛‛பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கு முதலில் என்னை அழைத்து ஆடிஷன் செய்தார்கள். ஆனால் அதையடுத்து படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. பின்னர் மீண்டும் அந்த படத்தை தொடங்கயிருந்தபோது எனக்கு அழைப்பு விடுத்தார் மணிரத்னம். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் அவர் எனக்கு கொடுத்த வேடத்தில் நடிப்பதற்கு மனதளவில் நான் தயாராக இல்லை. அதன் காரணமாக அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ள அமலா பால், அந்த வேடத்தில் நடிக்காதது எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் அந்த வேடத்தில் நான் நடிக்காததற்கு சில காரணங்கள் உள்ளது என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் அமலாபால் .