ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

சமீபத்தில் தெலுங்கில் வெளியான கார்த்திகேயா 2 திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நாயகன் நகில், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை சந்து மொண்டேத்தி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி சில காரணங்களால் இரண்டு முறை மாற்றப்பட்டு ஒருவழியாக கடந்த வாரம் வெளியானது. இந்த நிலையில் படம் வெளியாவதற்கு முன்பாக நடைபெற்ற பிரஸ்மீட்டில் தனது படத்தை வெளியிட விடாமல் தடுப்பதற்காக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் செயல்பட்டதாக கூறி கண்கலங்கினார் நாயகன் நிகில். அவர் யாரை குறிப்பிடுகிறார் என்பது அப்போது தெரியவில்லை
இந்தநிலையில் படம் வெளியாகி வெற்றிபெற்று இந்த படத்தின் சக்ஸஸ் மீட்டும் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு பேசும்போது, நிகில் போன்ற கதாநாயகர்களின் படங்களை ஊக்குவிக்க வேண்டும் அவருக்கு எப்போதும் நான் துணை நிற்பேன் என்று ஆறுதல் வார்த்தைகள் கூறினார்.
ஆனால் அவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் பேசுவதை பின்னால் நின்று கவனித்த ஹீரோ நிகில், தான் சொன்ன அந்த தயாரிப்பாளரே அவர் தான் என்பதை உணர்த்தும் விதமாக நமட்டு சிரிப்பு சிரித்தார். இது பேசிக்கொண்டிருந்த தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு தெரியாது. ஆனால் இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நேரம் இது தயாரிப்பாளர் தில் ராஜுவின் கவனத்திற்கும் சென்று சேர்ந்திருக்கும் அந்த வகையில் இந்த வீடியோ இரண்டு பேருக்குமே தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் உறுதி.