சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இரண்டு வருடங்களுக்கு முன்பு கவுதம் கிச்லு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நீல் என்ற ஆண் குழந்தை உள்ளது.
தமிழில் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் காஜல் அகர்வால் விரைவில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது. இந்நிலையில் 'பாகுபலி' கட்டப்பா பாணியில் ராஜமவுலிக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
'பாகுபலி'க்கு தான் அடிமை என்பதைக் குறிக்கும் வகையில் அவரது காலை எடுத்து தன் தலையின் மீது வைப்பார் கட்டப்பா. அது போலவே தனது குழந்தையின் காலை தன் தலை மீது வைத்துள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து, “ராஜமவுலி சார், இது உங்களுக்காக நீல் மற்றும் என்னுடைய அர்ப்பணிப்பு. நாங்கள் எப்படி முடியாது என்று சொல்ல முடியும்” என அப்பதிவில் 'பாகுபலி' படத்தில் நடித்த பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா டகுபட்டி, ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா ஆகியோரை டேக் செய்துள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்து தெலுங்கில் முதன் முதலில் அதிக வசூலைப் பெற்ற 'மகதீரா' படத்தில் காஜல் அகர்வால் தான் கதாநாயகி என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.