‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் | கனா தர்ஷனின் புதிய பட அறிவிப்பு | இளம் நாயகிகளும் பொறாமைப்படும் 'மார்கண்டேயினி' த்ரிஷா | தமிழ் ரசிகர்களைக் கவராத 'புஷ்பா… புஷ்பா…' | 'சலார்' டிவி ஒளிபரப்பு : அதிர்ச்சி தந்த டிஆர்பி ரேட்டிங் | யஷ் படத்திலிருந்து கரீனா கபூர் விலகல்? | அண்ணாமலை பயோபிக் : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆர்வம் | ப்ளடி பெக்கராக மாறிய கவின் |
மீசைய முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ஜோடியாக நடித்தவர் ஆத்மிகா. அதைத்தொடர்ந்து கோடியில் ஒருவன் படத்தில் நடித்து ரசிகர்களிடம் சற்று பிரபலமானார். மூன்று நாயகிகளில் ஒருவராக இவர் நடித்துள்ள காட்டேரி என்கிற திரைப்படம் நேற்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இவர் பதிவிட்டுள்ள கருத்து ஒன்று சோசியல் மீடியாவில் மட்டுமல்லாமல் திரையுலகிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது
இவர் பதிவிட்டுள்ளதாவது : ‛‛சலுகை பெற்றவர்கள் ஏணியில் ஏறுவதற்கு எளிதாக வழி கிடைப்பதை பார்க்கும்போது நன்றாகத்தான் இருக்கிறது. பாத்துக்கலாம்'' என்று கூறியுள்ளார்.
இதை பார்க்கும்போது தமிழ் சினிமாவில் நிலவிவரும் நெப்போடிசம் குறித்து இவர் குறிப்பிட்டுள்ளார் என்பது நன்றாகவே தெரிகிறது. ஆனால் யாரை குறிப்பிடுகிறார் என தெரியவில்லை. அதேசமயம் வாரிசு நட்சத்திரங்களுக்கு முதல் படம் வெளியாவதற்கு முன்பே அடுத்த படத்தில் வாய்ப்பு கிடைப்பதை மறைமுகமாக இவர் குறிப்பிட்டுள்ளார் என்றே பலரும் கூறி வருகிறார்கள்.