ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

ஆமீர்கான் நடித்துள்ள ‛லால் சிங் சத்தா' படம் அடுத்தவாரம் வெளியாகிறது. ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் என்ற படத்தின் ரீ-மேக் இது. இந்த படத்தை புறக்கணியுங்கள் என்ற குரல் எழுந்துள்ளது. தனது படத்தை புறக்கணிக்காதீர்கள், எனது படத்தை எல்லோரும் பாருங்கள் என கூறினார் ஆமீர்கான். இந்நிலையில் இந்த படத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பு வேண்டுமென்று பப்ளிசிட்டிக்காக உருவாக்கியது போல் உள்ளது என கங்கனா தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி கங்கனா கூறுகையில், ‛‛லால் சிங் சத்தா படத்தை சுற்றி எழுந்துள்ள எதிர்மறை விஷயங்களுக்கு பின்னணியில் ஆமீர்கானே இருக்கலாம். இந்தாண்டு தென்னிந்திய படங்கள் தவிர்த்து எந்த ஹிந்தி படமும் எடுபடவில்லை. ஹாலிவுட் ரீமேக் எப்படியும் வேலை செய்யாது. ஆனால் இப்போது அவர்கள் இந்தியாவை சகிப்புத்தன்மையற்றவர்கள் என்று கூறுவார்கள். இங்கு இந்துவோ, முஸ்லீமோ கிடையாது. பார்வையாளர்களின் ரசனையை ஹிந்தி சினிமா புரிந்து கொள்ள வேண்டும். சகிப்புத்தன்மையற்ற இந்தியா என்று கூறிய ஆமீர்கானே இந்துக்களுக்கு எதிரான ‛பிகே' எனும் பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தார். ஆகவே தயவு செய்து மதம் அல்லது சித்தாந்தம் பற்றி பேசுவதை நிறுத்துங்கள். மோசமான படங்கள், மோசமான நடிப்பில் இருந்து இது திசை திருப்பும் செயல்'' என்கிறார்.