இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
தங்கள் அபிமான ஹீரோக்களை ஆராதிக்கிறேன் என்று சில ரசிகர்கள் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம், அதற்கு பல அடி உயர மலர்மாலை என ஒரு பக்கம் அதிரடி காட்டி வருகின்றனர். இன்னும் சிலரோ ஏதாவது வித்தியாசமாக செய்து தங்கள் அபிமான ஹீரோக்களின் கவனத்தை ஈர்த்து அவர்களை நேரிலேயே சந்தித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது வயலில் விதைத்த நெல் நாற்றங்காலில் ராம்சரண் உருவத்தை வரைந்து அதை வீடியோவாகவும் புகைப்படம் எடுத்துக்கொண்டு நடந்தே ஐதராபாத்துக்கு வந்து ராம்சரணை நேரிலேயே சந்தித்து சென்றார் ஒரு ரசிகர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் இளம் ரசிகையான மும்பையை சேர்ந்த டாக்டர் செர்ரி என்பவர் தனது அபிமானத்தை வெளிப்படுத்துவதற்காக விஜய் தேவரகொண்டாவின் உருவத்தை தனது முதுகில் டாட்டூவாக குத்திக்கொண்டுள்ளார். இந்த தகவல் விஜய் தேவரகொண்டாவின் கவனத்திற்கு சென்றதும் அவரை தற்போது தான் நடித்துவரும் லைகர் படத்தின் அலுவலகத்திற்கு வரவழைத்தார் விஜய் தேவரகொண்டா.
நேரில் வந்த அந்த ரசிகை விஜய் தேவரகொண்டாவை பார்த்த பிரமிப்பில் பேச்சு வராமல் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்துவிட்டார். பின் ஒருவழியாக சமாதானமாகி தனது முதுகில் வரைந்திருந்த டாட்டூவை அவரிடம் காட்டினார். இப்படியும் ஒரு ரசிகையா என ஆச்சரியப்பட்டுப் போன விஜய் தேவரகொண்டா கண்கலங்கியபடி நின்ற அந்த ரசிகையை மெல்ல அரவணைத்து ஆசுவாசப்படுத்தினார். இந்த நிகழ்வின்போது லைகர் படத்தின் தயாரிப்பாளர் நடிகை சார்மி மற்றும் படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோரும் உடனிருந்தனர்.