தக் லைப்பில் அதிரடி நடனத்திற்கு தயாராகும் த்ரிஷா | குணா பாடலுக்கு முறைப்படி அனுமதி பெற்றுள்ளோம் : மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் விளக்கம் | நான் சிங்கிள், மிங்கிளாக விரும்பவில்லை : ஸ்ருதிஹாசன் | பாராசூட்டில் பறந்த கோட் பட நாயகி மீனாட்சி சவுத்ரி! | அபுதாபியில் பிரதமர் மோடி திறந்து வைத்த கோயிலுக்கு சென்ற ரஜினி | 100ஐத் தொட்டது 2024 தமிழ்ப் படங்கள் ரிலீஸ் | சூர்யா 44 படப்பிடிப்பு ஜுன் முதல் ஆரம்பம் | மீண்டும் பெண் குழந்தையை பெற்றெடுத்த ஸ்ரீதேவி | கழுத்தில் தாலியுடன் ஆர்த்தி சுபாஷ் : ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம் | அரசியல் பிரபலத்துடன் திருமணமா? - ரேகா நாயர் ஓபன் டாக் |
எந்த கதாபாத்திரம் என்றாலும் அதுவாகவே மாறிப்போய் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் மிகச்சில நடிகைகளின் ரேவதியும் ஒருவர். அதனால் தான் இந்த முப்பது வருடத்திற்கு மேலான அவரது திரையுலக பயணத்தில் மூன்று முறை தேசிய விருது பெற்றுள்ளார். அதேசமயம் நடிக்க வந்த காலத்திலிருந்து தற்போது வரை கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.. இந்த நிலையில் இந்த வருடம் அறிவிக்கப்பட்ட கேரளா அரசு விருது பட்டியலில் பூதக்காலம் என்கிற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகைக்கான விருது ரேவதிக்கு அறிவிக்கப்பட்டது.
ஹாரர் திரில்லராக உருவாகியிருந்த இந்தப்படத்தில் கணவன் இல்லாத நிலையில் தனது மகனை வளர்க்க தனியாளாக போராடும் சராசரிப்பெண் கதாபாத்திரத்தில் ரேவதி நடித்துள்ளார். இந்த நிலையில் தங்களது சக நடிகையான ரேவதி முதன்முறையாக கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது பெற்றுள்ளதை அவரது தோழிகளாக எண்பதுகளில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்த குஷ்பு, சுகாசினி, லிசி, அம்பிகா ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.