விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது | குழந்தையின் தாய் தற்கொலை : மனிதநேயம் இறந்து கொண்டிருப்பதாக நடிகை கல்யாணி ஆதங்கம் | 'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் | 5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் |
நடிகை மற்றும் மாடாலான மீரா மிதுன் பிக்பாஸ் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த அவர் பல்வேறு சர்ச்சையான கருத்துகளை பேசி பலரிடமும் வெறுப்பை சம்பாதித்தார். இதன் காரணமாக இவர் மீது வழக்குகள் தொடரப்பட்டது. அந்த வழக்குகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற விசாரணையையும் எதிர்க்கொண்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் தனக்கு சாவதை தவிர வேறு வழியில்லை என்று கூறி கதறி அழுதுள்ளார்.
அந்த வீடியோவில், 'என்னுடைய சாதனைகள் எதுவும் வெளியே தெரியவில்லை என்ற ஆதங்கத்தில் அப்படி பேசிவிட்டேன். இன்று, என் பெற்றோரும் என்னை சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள். கடந்த 6 மாத காலமாக என் மீது தொடர் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. நீதிமன்றத்துக்கு வழக்குகள் தொடர்பாக அலைந்து திரிவதால் வருமானத்துக்கே வழியில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லை. இந்த சமூகம் என்னை வாழ முடியாமல் செய்கிறது. இனிமேலும் என்னை இந்த சமூகம் வாழ விடவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்' என்று அவர் அதில் பேசியுள்ளார். மீரா மிதுன் மனமுடைந்து கதறி அழும் இந்த வீடியோவை பார்த்து அவரை ட்ரோல் செய்த நெட்டிசன்கள் கூட பரிதாப்பட்டு வருகிறார்கள்.