விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக விஜய்யின் 67 வது படத்தை இயக்கப் போகிறார். இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், சூர்யா நடிப்பில் இயக்கவிருந்த இரும்புக்கை மாயாவி படம் கைவிடப்பட்டது ஏன் என்பது குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில் இரும்புக்கை மாயாவி படத்திற்காக ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டு வந்த போது அந்த படத்தை இயக்குவதற்கான தைரியம் எனக்கு இல்லாதது போன்று உணர்ந்தேன். அதன் காரணமாகவே அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம், இந்தப் படத்தை இப்போதைக்கு என்னால் இயக்க முடியுமா என சந்தேகம் இருக்கிறது. அதனால் இன்னும் சில படங்களை இயக்கி விட்டு அதன் பிறகு இந்த படத்தை தொடங்கலாம் என்று கூறினேன். அதற்கு அவரும் சம்மதிக்கவே சூர்யா நடிக்க இருந்த இரும்புக்கை மாயாவி படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார் லோகேஷ். தற்போது கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்திருக்கும் நிலையில் விரைவில் இரும்புக்கை மாயாவி படத்தில் அவர்கள் இணைய வாய்ப்பு உள்ளது.