படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
பாடகராகவும், பாடலாசிரியராகவும், நடிகராகவும் சினிமாவில் என்ட்ரி கொடுத்த அருண் ராஜா காமராஜ், கனா படத்தில் இயக்குனராக உருவெடுத்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது திரைக்கு வந்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்தையும் இயக்கினார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பரவலாக பாராட்டுகள் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக அருண் ராஜா காமராஜ் இயக்கும் படம் குறித்த ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
கனா படத்தை அடுத்து கார்த்தியை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறார் அருண் ராஜா காமராஜ். அப்போது அவர் பல படங்களில் பிசியாக இருந்துள்ளார். அதன்காரணமாகவே உதயநிதி நடிப்பில் நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது கார்த்தி நடிக்கும் படத்தை அடுத்தபடியாக இயக்குவதற்கு தயாராகிவிட்டார் அருண்ராஜா காமராஜ்.
பல மொழி படமாக உருவாகும் இப்படம் முழுக்க முழுக்க தென்னாப்பிரிக்காவில் நடக்கும் கதையில் உருவாகிறதாம். இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல தெலுங்கு நடிகரிடத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தற்போது ராஜூமுருகன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார் கார்த்தி. அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அருண் ராஜா காமராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்திருக்கிறார்.