ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் | கதாசிரியர் ஆன தமன் | பிளாஷ்பேக் : தமிழில் ஹீரோவாக நடித்த விஷ்ணுவர்தன் | பிளாஷ்பேக் : சிவாஜி பட தலைப்பில் நடித்த எம்.ஜி.ஆர் | குறுக்கு வழியில் முன்னேறும்போது 4 வருடம் போராடி ஜெயித்துள்ளேன் : புதுமுக நடிகை அதிரடி | ஹரிஹர வீரமல்லு - எந்த 'கட்'டும் இல்லாமல் ‛யு/ஏ' சான்று | ‛புதிய பயணம்...' : ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன் | ‛இந்தியன் 3' : மீண்டும் உருவாக ரஜினிகாந்த் தலையீடு | ஜெனிலியா எதிர்பார்க்கும் வேடம்... : மீண்டும் தமிழில் நடிக்க வருவாரா? | சினிமா டிக்கெட் கட்டணம் : கர்நாடகாவில் புதிய அறிவிப்பு |
மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பிற்கு பிறகு அவரது படங்கள் மீதான எதிர்பார்ப்பு திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிகரித்து உள்ளது. அந்த வகையில் தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து வில்லனாக நடித்துள்ள டான் திரைப்படம் மே 13 வெளியாக இருக்கிறது. அதேசமயம் அவர் ஹீரோவாக நடித்துள்ள கடமையை செய் என்கிற படமும் இதே மே மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை வெங்கட்ராகவன் இயக்கியுள்ளார். இவர் சுந்தர்.சி நடித்த முத்தின கத்திரிக்காய் என்கிற படத்தை இயக்கியவர்.
இந்த கடமையை செய் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சிம்புவின் தந்தையான டி ராஜேந்தர் தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் மூலமாக வெளியிட இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. மாநாடு படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்ததால் கிடைத்த வெற்றியும் அந்தப் படத்தில் ஏற்பட்ட நட்பும் தான் எஸ்.ஜே.சூர்யா படத்தை சிம்புவின் நிறுவனம் வெளியிடும் அளவிற்கு கொண்டுவந்துள்ளது என்று திரையுலகில் பேசப்படுகிறது.