‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலா இயக்கும் தனது 41 ஆவது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டியும், தங்கையாக மலையாள நடிகை மமிதா பைஜுவும் நடிக்க, ஜிவி .பிரகாஷ் இசையமைக்கிறார்.
2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்த வரும் நிலையில் அடுத்து மதுரை, கோவாவில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார் பாலா. இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் அதில் ஒரு வேடத்தில் காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக நடிப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து அப்பட வட்டாரத்தில் விசாரித்தபோது, இப்படத்தில் சூர்யா ஒரு வேடத்தில் மட்டுமே நடிப்பதாகவும், இதற்கு முன்பு பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் விக்ரம் நடித்தது போன்று ஒரு மாறுபட்ட ஹீரோவாக சூர்யா நடித்து வருவதாகவும் கூறுகிறார்கள்.