சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
தென்னிந்திய சினிமாவின் முக்கியமான பழம்பெரும் நடிகை லட்சுமி. தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக அவர் 2015ம் ஆண்டு வெளியான மூணே மூணு வார்த்தை என்ற படத்தில் நடித்தார். மதுமிதா இயக்கிய இந்த படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஜோடியாக நடித்தார்.
அதன்பிறகு தெலுங்கில் சமந்தாவுடன் ஓ பேபி படத்தில் நடித்தவர் இப்போது கன்னடப் படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கொரோனா காலத்துக்கு முன்பே தொடங்கப்பட்ட படம். இப்போது நிலைமை சரியானதும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இயக்குநர் கதையை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது, கதையும் பிடித்திருந்தது அதனால் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஒரே பிரச்சினையை வெவ்வேறு நபர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதுதான் படத்தின் ஒன் லைன். நல்ல கதைகள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன். இன்னும் உயிரோடு இருப்பதுதான் என்னை நடிக்க வைக்கிறது, நான் விரும்பும் விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். இளைய தலைமுறையிடமிருந்தும் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். என்றார்.