ஹீரோக்களுக்கு எதிராக ஹீரோக்களே வசனம் பேசும் புதிய ட்ரெண்ட் | தனது வருங்கால மனைவியை மோகன்லாலுக்கு அறிமுகப்படுத்திய காளிதாஸ் | விஜய் மகன் படத்தில் நடிக்க அழைத்தது உண்மைதான் : கவின் | திடீரென கதை சர்ச்சையை கிளப்பிய கதாசிரியருக்கு நிவின்பாலி பட தயாரிப்பாளர் கண்டனம் | வேட்டைக்காரன், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மாவீரன் - ஞாயிறு திரைப்படங்கள் | பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் |
இயக்குனர் சிவா கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் 'அண்ணாத்த' படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் நேர்காணலில் கூறிய சிவா , தான் அடுத்ததாக ரஜினி, அஜித், விஜய் ஆகியோருடன் புதிய படத்திற்காக பேச்சு வார்த்தை நடந்து வருவதாக குறிப்பிட்டார் .
இந்நிலையில் அவர் அடுத்ததாக சூர்யா நடிப்பில் புதிய படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . கிராமத்து கதைக்களத்தில் இருக்கும் இப்படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் . ஏற்கனவே சூர்யாவின் ஒரு படத்தை சிவா இயக்குவதாக இருந்தது. ஆனால் ரஜினி பட வாய்ப்பு வந்ததால் இந்த படம் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதையடுத்து சிவா இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.