‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி | மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் |
காஷ்மீரில் 1990களில் இந்து பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதை கதை களமாக கொண்டு உருவாகியுள்ள படம் தி காஷ்மீர் பைல்ஸ். இந்த படத்தை பிரதமர் முதல் பல தலைவர்கள் பாராட்டி உள்ளார்கள். பல மாநிலங்கள் வரிவிலக்கு அளித்துள்ளது. 19 கோடியில் தயாரான படம் 200 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது.
ஆனால் சில அமைப்புகள் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் பாலிவுட் நடிகரான ஆமீர்கான் காஷ்மீர் பைல்ஸ் படம் ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம் என்று கூறியிருக்கிறார்.
மும்பையில் நடந்த ஆர்ஆர்ஆர் பட அறிமுக விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: ஒவ்வொரு இந்தியரும் 'காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்தை பார்க்க வேண்டும். மனிதநேயம் உள்ள அனைவர் மனதையும் இந்தப் படம் உணர்ச்சிவசப்பட வைக்கும். கண்டிப்பாக நான் இந்தப் படத்தை பார்ப்பேன். தியேட்டர்களில் காஷ்மீர் பைல்ஸ் வெற்றிகரமாக ஓடுவதை பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது. என்று பேசினார்.