புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
தமிழ்த் திரையுலகத்தில் உள்ள முக்கியமான 24 தொழிலாளர் சங்கங்களை உள்ளடக்கிய பெப்சி அமைப்பினருக்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே நேற்று புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் அரசு தரப்பினர் முன் கையெழுத்தாகும் என்று பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி தரப்பில் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், நேற்று அந்த புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.
தற்போது பெப்சி தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக 40 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதாகச் சொன்னார்கள். ஆனால், தயாரிப்பாளர் சங்கத் தரப்பில் சிலரும், பெப்சி அமைப்பில் அங்கம் வகிக்கும் சில சங்கங்களும் இதுகுறித்து தங்களது ஆட்சேபங்களைத் தெரிவித்தார்களாம். அதனால், இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபறி நிலைமை நீடித்து வருகிறதாம்.
கடந்த சில வருடங்களாகவே ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகாத நிலையில் இந்த புதிய ஒப்பந்தத்தை எதிர்பார்த்து காத்திருந்த பல தொழிலாளர் சங்கத்தினர் ஏமாற்றமடைந்துள்ளனர். கடைசி கட்டப் பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருகிறதாம். விரைவில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.