விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? | 'ஒரு நொடி' இயக்குனரின் அடுத்த படம் தொடங்கியது | மே 9ல் வெளியாகும் ராயன் முதல் பாடல் | ‛மணி இன் தி பேங்க்' : யுவன் வெளியிட்ட ஆல்பம் | ஏற்காட்டுக்கு ஜாலி டூர் கிளம்பிய நடிகர்கள் |
ஆக்சன், அரண்மனை-3 படங்களை தொடர்ந்து மீண்டும் வழக்கமான தனது காமெடி ரூட்டிற்கு திரும்பியுள்ளார் இயக்குனர் சுந்தர்.சி. அவர் இயக்கவுள்ள புதிய படத்தில் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் என மூன்று பேர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா, பிகில் புகழ் அம்ரிதா மற்றும் மாளவிகா சர்மா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நேற்று துவக்க விழா நிகழ்வுடன் ஆரம்பித்துள்ளது.. ஏற்கனவே சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு-2 படத்தில் ஜீவாவும் ஜெய்யும் இணைந்து நடித்திருந்ததனர். ஆனால் ஸ்ரீகாந்த் தற்போதுதான் முதன்முறையாக சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கிறார்.