ஆஸ்கருக்குள் நுழைந்தது 'பார்க்கிங்' | கல்கியின் 'புஜ்ஜி' அறிமுகம் : பிரபாஸ் சாகசம் | தீபாராதனை தட்டால் தனது உருவத்தை வரைந்த ரசிகருக்கு ராகவா லாரன்ஸின் வேண்டுகோள் | ஒரு மாத்திற்குள் ஓடிடிக்கு வந்த 'ரத்னம்' | முத்தக் காட்சியில் நடிக்க கீர்த்தி சுரேஷ் சம்மதம்? | 358 கோடி ரூபாய் வைர நகை அணிந்த பிரியங்கா | சினிமாவில் இந்த நிலை மாறி உள்ளது - காஜல் அகர்வால் | பெங்களூரு போதை விருந்து : 2 தெலுங்கு நடிகைகள் கைதாகிறார்கள் | நான் ரொம்ப பிட் தான் - சமந்தா அதிரடி தோற்றம் | ரஜினிக்கு கோல்டன் விசா வழங்கி யுஏஇ அரசு கவுரவிப்பு |
தென்னிந்தியத் திரையுலகத்தில் கடந்த வருடம் பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்களில் நாகசைதன்யா, சமந்தா பிரிவும் ஒன்றாக இருந்தது. தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில் இருந்து நாகசைதன்யாவின் குடும்பப் பெயரான 'அக்கினேனி' என்பதை சமந்தா நீக்கியது அவர்களது பிரிவு சர்ச்சையை ஆரம்பித்து வைத்தது.
அதன்பின் கடந்த வருடம் அக்டோபர் மாதம் சமந்தா, நாகசைதன்யா இருவரும் சமூக வலைத்தளங்களில் தங்களது பிரிவை ஒரே மாதிரியான அறிக்கையாக வெளியிட்டனர்.
தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அந்த அறிக்கைப் பதிவை சமந்தா தற்போது நீக்கியுள்ளார். நாகசைதன்யாவின் சமூக வலைத்தளங்களில் அந்தப் பதிவு அப்படியே இருக்க சமந்தா மட்டும் நீக்கியிருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தனது பிரிவு பற்றிய அறிவிப்புக்குப் பிறகு நாகசைதன்யாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கினார் சமந்தா. தற்போது பிரிவு பற்றிய அறிவிப்பையும் நீக்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.