மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
காமெடி படங்களை இயக்குவதில் நம்பர் ஒன் இயக்குனர் என பெயரெடுத்த இயக்குனர் சுந்தர்.சி பாகுபலி போல ஒரு வரலாற்று படத்தை இயக்கவேண்டும் என விரும்பியே 'சங்கமித்ரா'வை உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பதாக முடிவான இந்தப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பதற்காக ஒப்பந்தமாகினர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தமானார். அப்போது நடைபெற்ற கேன்ஸ் திரைப்படவிழாவில் இந்தப்படத்தை பற்றிய அறிவிப்பு, பர்ஸ்ட்லுக் ஆகியவை சிவப்பு கம்பள வரவேற்புடன் வெளியிடப்பட்டன.
ஆனால் சில காரணங்களால் இந்தப்படத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். இந்தநிலையில் படத்தை தயாரிப்பதாக சொன்ன தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு எச்சரிக்கையும் விளக்கமும் கலந்த ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன் சாராம்சம் இதுதான்.. அதாவது இந்தப்பட தயாரிப்பில் தாங்கள் தான் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி என கூறிக்கொண்டு ஒரு சிலர் அதற்கான பணம் திரட்டுகிறோம் என பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.. இது சட்டத்திற்கு புறம்பானது.. நாங்கள் அப்படி பணம் திரட்டவோ அல்லது திரட்டுவதற்காக எங்கள் பிரதிநிதிகள் என யாரையுமோ நியமிக்கவில்லை. அதனால் இப்படி கூறிக்கொண்டு வரும் நபர்களிடம் யாரும் இந்தப்படம் சம்பந்தமாக எந்தவித பணப்பரிமாற்றமும் செய்துகொள்ள வேண்டாம். இதுபோன்ற நபர்களை ஊக்கப்படுத்தவும் வேண்டாம். இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களால் ஏற்படும் விளைவுகளுக்கு எங்கள் நிறுவனம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது என கூறியுள்ளனர் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவத்தினர்.