ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று வெளியேறியுள்ளார் அக்ஷரா. மாடல் மற்றும் நடிகையான இவர், தமிழ்நாட்டு மக்களிடம் முன்னதாக பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. ஆனால், சின்னத்திரை பிக்பாஸ் நிகழ்ச்சி அக்ஷராவுக்கு அடையாளத்தை பெற்று தந்துள்ளது. அந்த வகையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அக்ஷராவை சமூக வலைத்தளம் தொடங்கி ஊடகம் வரை அனைவரும் பின் தொடர்கின்றனர். அந்த வகையில் அவர் தற்போது கொடுத்துள்ள பேட்டியில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரகசியத்தை எதார்த்தமாக உடைத்துள்ளார்.
அந்த பேட்டியில், அக்ஷராவிடம், வருணுக்கு பிக்பாஸ் வீட்டில் படுக்கையறையில் முத்தம் கொடுத்தது பற்றி கேள்வி கேட்கப்படுகிறது அதற்கு பதிலளித்த அக்ஷரா, 'நான் வருணுக்கு முத்தம் கொடுக்கல. பெக் தான் பண்ணேன். அதுவும் வருண் போட்டுருந்த ஷர்ட் ஹூட் மேல பெக் பண்ணேன். ஆனால், பிக்பாஸ்ல அப்படியா காமிச்சாங்க?' என கேட்டுள்ளார்.
வருண் மற்றும் அக்ஷரா பிக்பாஸ் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். வெளியில் வந்த பிறகும் இருவரும் அடிக்கடி பொது இடங்களில் சந்தித்து வருகின்றனர். இதனால் இவர்கள் காதலிக்கிறார்களா? என்ற வதந்தியுடன் பிக்பாஸ் முத்த சர்ச்சையும் சேர்ந்து கொண்டது. ஆனால், அதற்கான சரியான சரியான விளக்கத்தை அக்ஷரா தற்போது கொடுத்துள்ளார்.