கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியான ஒரு காலத்தில் முன்னணி தொலைக்காட்சி நட்சத்திரமாகவும் திகழ்ந்தார். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் திரை வெளிச்சத்தில் இருந்து விலகி இருந்த மகேஸ்வரி, தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ளார். அவருக்கு சினிமா வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.
அவரது திருமண வாழ்க்கை ஸ்மூத்தாக செல்லவில்லை. இதனால் மனமுடைந்த மகேஸ்வரி விரைவிலேயே விவகாரத்து பெற்றார். மகேஸ்வரிக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார்.
இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது தனிமை குறித்து மிகவும் வருந்தி பேசியுள்ளார். அதில், 'ரெண்டாவது கல்யாணத்த பத்தி யோசிக்கவே முடியல. யார் மேலயும் நம்பிக்கை வரவே மாட்டங்குது. என்னோட பையன், என்னோட அம்மா, என்னோட கேரியர் மூன்றையும் பேலன்ஸ் பண்ணி ஆகனும். இத புரிந்து கொள்கிற மாதிரி ஒரு துணையை என்னால் தேர்வு பண்ண முடியல. வரபோறவர் என்னுடைய பையனையும் ஏற்றுக் கொள்ளணும். அதனால இரண்டாவது திருமண வாழ்க்கை சரியாக இருக்குமா என்கிற பயம் இருக்கு. நானும் என் அம்மாவும் சிங்கிள் மதர் தான்' என்று பேசும் போது வீஜே மகஸ்வரி, அழுது கொண்டே பேசினார்.