ராயன் : தனுஷ் பாடிய ‛அடங்காத அசுரன்' பாடல் வெளியீடு | விஜயகாந்த்திற்கு பத்மபூஷண் விருது : மனைவி பிரேமலதா பெற்றார் | சல்மான்கானுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா | மேஜையை கண்டு பொறாமைப்பட்ட கமல் | பிறந்தநாளில் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தும் விஜய்? | தெலுங்கில் ரீ-ரிலீஸ் ஆகும் விக்ரமின் அந்நியன் | மம்முட்டிக்கு கொடுக்கப்பட்ட எக்ஸ்ட்ரா பவர் | படம் வெளியாவதற்கு முன்பே மறைந்த சங்கீத் சிவன் | மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் சொல்லப்பட்டது உண்மையா? - விசாரிக்க தமிழக அரசு உத்தரவு | அந்த மூணு சர்ப்ரைஸை தயவு செய்து சொல்லாதீங்க : இளன் வேண்டுகோள் |
மாறா, சக்கரா படங்களுக்கு பிறகு ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் படம் கலியுகம். தமிழ், தெலுங்கில் தயாராகிறது. பிரைம் சினிமாஸ் நிறுவனத்தின் ஆர்.கே. இன்டர்நேஷனல் இன்கார்பரேட் சார்பில் ராமகிருஷ்ணன் தயாரிக்கிறார். ப்ரமோத் சுந்தர் இயக்கி வருகிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன் கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கே.ராம்சரண் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது. தற்போது கலை நயத்துடன் உருவாக்கப்பட்ட அதிநவீன அரங்கத்தில் தொடங்கியிருக்கிறது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ப்ரமோத் சுந்தர் கூறியதாவது : போஸ்ட் அபோகாலிப்டிக் எனப்படும் இறுதி பேரழிவிற்கு பின்னரான திரில்லர் ஜானரில் தயாராகி வரும் படம். திறமையான இளைய தலைமுறை கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வருகிறது. ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் தயாராகி வருவதாலும், தயாரிப்பில் இருக்கும்போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. என்றார்.