‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடித்து தெலுங்கில் தயாராகி தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி டிசம்பர் 17ம் தேதி வெளியான படம் 'புஷ்பா'.
இப்படம் முதல் நாளில் 71 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நேற்றைய வசூலுடன் சேர்த்து இரண்டே நாளில் 116 கோடி வசூலித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார்கள்.
'பாகுபலி 2' படம் தவிர்த்து ஆந்திரா, தெலங்கானாவில் ஒரு தெலுங்குப் படத்தின் இரண்டாவது நாள் வசூலில் 'புஷ்பா' சாதனை படைத்துள்ளது. நேற்று மட்டும் இப்படம் அந்த இரண்டு மாநிலங்களிலும் சுமார் 14 கோடி வசூலித்துள்ளதாம்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இன்றைய வசூல் முதல் நாள் வசூல் அளவிற்கு இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். அடுத்த சில தினங்களில் இப்படம் 150 கோடி வசூலைக் கடந்தால் படம் லாபக் கணக்கில் சென்றுவிடும் என்கிறார்கள்.
ஆந்திராவில் இப்படத்தின் டிக்கெட்டுகள் அரசு நிர்ணயித்த விலைக்கு அதிகமாக விற்கப்படாத காரணத்தால் படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இல்லையென்றால் வசூல் தொகை இன்னும் அதிகமாகியிருக்கும்.
அல்லு அர்ஜுன் எதிர்பார்த்தபடியே இந்தப் படம் அவருக்கு தமிழிலும், ஹிந்தியிலும் புது வியாபாரத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.