ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வடிவேலு நடித்த தெனாலிராமன் மற்றும் எலி ஆகிய படங்களை இயக்கியவர் யுவராஜ் தயாளன். இவரது இயக்கத்தில் உருவாகும் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார் என்று ஏற்கனவே சொல்லப்பட்டது. இந்த நிலையில் அந்த படத்தில் இருந்து நயன்தாரா விலகிவிட்டார் என்றும் அவருக்கு பதிலாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது.
யுவராஜ் சொன்ன கதை பிடித்து தான் நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டார் என்றாலும், தற்போது பாலிவுட்டில் அவர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக யுவராஜ் படத்திற்காக ஒதுக்கி வைத்திருந்த தேதிகளையும் ஷாருக்கான் படத்திற்கு கொடுக்க வேண்டியதாகிவிட்டதாம். அதனாலேயே அவர் இந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக விக்ரம் வேதா நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு ஒப்பந்தம் செய்து விட்டதாகவும் புதிய தகவல் வெளியாகி உள்ளது.