மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தென்னிந்தியத் திரையுலகத்தில் தற்போதுள்ள முன்னணி நடிகைகளில் இளம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. அல்லு அர்ஜுன் ஜோடியாக 'புஷ்பா' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்ற 'ஸ்ரீவள்ளி', 'சாமி சாமி' பாடல்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இரண்டு பாகங்களாக உருவாகி வரும் 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போதும் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் படப்பிடிப்பின் லஞ்ச் இடைவெளியில் சுவாரசியமான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா. அதில் கை விரல்கள் பகுதி மட்டும் அவரது வழக்கமான உடல் நிறத்தில் இருக்க, கையின் மற்ற பகுதி கருப்பு நிறத்தில் இருக்கிறது.
படத்தில் மேக்கப் மூலம் அவரை கருப்பான பெண்ணாக மாற்றியிருக்கிறார்கள். மேக்கப் மூலம் எப்படி மாற்றியிருக்கிறார்கள் என்பதை தெரிவிக்க ராஷ்மிகா இந்த புகைப்படத்தைப் பகிர்ந்திருப்பார் போலிருக்கிறது.
செம்மரக் கடத்தல் பற்றிய படம் என்பதால் படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா ஆகியோர் தமிழர் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களா என்ற சந்தேகம் இப்படம் ஆரம்பிக்கப்பட்ட போதே எழுந்தது. படம் வெளிவரும் சமயம் ஏதாவது சர்ச்சைகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.