ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்துள்ள சமந்தா, படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை என்றாலும், மனதளவில் நிறைவாக இருக்கிறார். காரணம், ஒவ்வொரு கலைஞர்களுக்குமே தான் சிறுவயதில் அதிகமாக பாதிக்கப்பட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும்,. அப்படி எனக்கும் இருந்தது. நான் பள்ளிக்கூடத்தில் படித்த காலங்களில் சிலர் என்னை லவ் அப்ரோச் செய்தனர். அதில் ஒருவர் எனக்கு பிடித்து விட, சிலகாலம் நானும் அந்த என்ற மாயையில் விழுந்திருந்தேன்.
ஆனால் நாளடைவில் மாயமாய் வந்த காதலும் மாயமாய் போய் விட்டது. ஆனாலும், இப்போது என் மனம் அதை நினைத்து அசைபோட்டுப்பார்ப்பதுண்டு. விவரமில்லாத வயதில் வந்த காதல் என்றாலும், காதல் விவகாரமானது என்பதால் அதில் அவ்வப்போது மனம் தித்திப்பதுண்டு. அதனால்தான் நீதானே என் பொன்வசந்தம் படத்திலும் அதேபோன்ற வேடம் என்றதும் அதிக ஈடுபாட்டுடன் நடித்தேன் என்கிறார் சமந்தா. அந்தவகையில் கெளதம்மேனன்தான் தமிழில் என்னை புரிந்து கொண்டு சரியான வேடத்தில் யூஸ் பண்ணியிருக்கிறார். அடுத்தபடியாக தெலுங்கு இயக்குனர்கள்தான் என்னை படத்துக்குப்படம் சரியான வேடங்களில் யூஸ் பண்ணி வருகிறார்கள். அதனால்தான் தமிழைவிட எப்போதுமே நான் தெலுங்கு சினிமா மீதே அதிக ஈடுபாடாக இருந்து வருகிறேன் என்கிறார் சமந்தா.