‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக இயக்குனரானவர் கார்த்திக் நரேன். முதல் படமான துருவங்கள் 16-லேயே கவனம் பெற்றார். கார்த்திக் நரேன் படத்தையும், மேக்கிங் ஸ்டைலையும் மணிரத்னம், கவுதம் வாசுதேவ மேனன் போன்றவர்கள் பாராட்டினர். கார்த்திக் நரேனின் அடுத்தப் படத்தை கவுதம் தயாரித்தார். அரவிந்த்சாமி, ஸ்ரேயா, இந்திரஜித், சந்தீப் கிஷன் நடிப்பில் இரண்டாவது படம் நரகாசூரன் ஆரம்பமானது.
படம் முடிந்த பிறகு வெளியிடவும் முடியவில்லை. கார்த்திக் நரேன் அருண் விஜய், பிரசன்னாவை வைத்து மாபியா - சேப்டர் 1 படத்தை எடுத்தார். மணிரத்னம் தயாரித்த நவரசா ஆந்தாலஜியில் ஒரு கதையை கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார். இரண்டுமே போதிய வரவேற்பை பெறவில்லை. தற்போது தனுஷ் நடிப்பில் மாறன் படத்தை இயக்கி வருகிறார். படம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.
இதையடுத்து கார்த்திக் நரேன் அதர்வா நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதற்கான முதல்கட்டப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது.