தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா | என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் | அரண்மனையில் கலகலப்பு : சுந்தர்.சியின் அடுத்த பிளான் | கல்கி கன்னட உரிமையை கைப்பற்றிய யஷ் பட நிறுவனம் | தோனி சாயலில் பாகுபலி : ஒப்புக்கொண்ட ராஜமவுலி | ரஜினியை சந்தித்த ஆர்டிஎக்ஸ் இயக்குனர் | கதை நாயகன் ஆன தயாரிப்பாளர் | வானத்தைப்போல ஸ்வேதா திருமணம்: காதலரை மணந்தார் |
கடந்த ஆண்டு தமிழில் வெற்றி பெற்ற 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்திற்குப் பிறகு துல்கர் சல்மான் கைவசம் ‛குருப்', 'ஹே சினாமிகா', 'சல்யூட்' உள்ளிட்டப் படங்கள் உள்ளன. அடுத்ததாக, பாலிவுட் இயக்குனர் பால்கியின் த்ரில்லர் படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், கேரளாவில் கொள்ளை சம்பவங்களால் அதிரவைத்த சுகுமாரா குருப்பின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட துல்கர் சல்மானின் 'குருப்' முன்பு, ஓடிடி.,யில் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், கேரளாவில் அக்.,25ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், தியேட்டரிலேயே வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. அதன்படி வரும் நவம்பர் 12ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
துல்கர் சல்மானே தயாரித்துள்ள இப்படத்தில், ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, டொவினோ தாமஸ், ஷிவஜித், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். இப்படம் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது.