புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான சுதா சந்திரனுக்கு மும்பை விமான நிலையத்தில் ஏற்பட்ட அவமதிப்புக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மன்னிப்பு கோரினர்.
தமிழ் சினிமாவில் மயூரி என்ற திரைப்படத்தின் வாயிலாக 1984ல் அறிமுகமானவர் சுதா சந்திரன் 56. பரதநாட்டிய கலைஞரான இவர், 1981ல் நடந்த சாலை விபத்தில் ஒரு காலை இழந்தார்.
பிரதமருக்கு கோரிக்கை
அதன்பின், செயற்கை கால் பொருத்தி நடனக் கலைஞர் கதாபாத்திரத்தில் இவர் நடித்த மயூரி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். ஏராளமான ஹிந்தி மற்றும் தமிழ் டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர், வெளியூர் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் மும்பை திரும்பினார்.
மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் அதிகாரி, சுதா சந்திரனின் செயற்கை காலை அகற்றி காட்டும்படி கேட்டார். இந்த சம்பவம் குறித்து, தன் சமூக வலைதள பக்கத்தில் நடிகை சுதா சந்திரன், வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.