‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலில் ஆர்ஜே செந்தில் இரட்டை வேடங்களிலும், அவருக்கு ஜோடியாக ரக்ஷா, ராஷ்மி ஆகியோரும் நடித்து வந்தனர். கொரோனா ஊரடங்கின் போது ஏற்பட்ட சிக்கலால் இந்த தொடர் முடித்து வைக்கப்பட்டு, சீசன் 2-வாக தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் செந்தில் - ரச்சிதா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் காமெடி ட்ராக்கில் கலக்கி வந்த ராஜூ பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதன் காரணமாக முதல் சீசனில் பட்டையை கிளப்பிய சிவகாந்தையே இந்த சீசனிலும் நடிக்க வைக்க சீரியல் குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஆர்ஜே சிவகாந்த் தனது இன்ஸ்டாகிராமில் 'ஐ எம் பேக்' என பதிவிட்டு நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் தான் மீண்டும் இணைந்திருப்பதை உறுதி செய்துள்ளார். முதல் சீசனில் இவரது காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகியருந்ததால் ரசிகர்களும் சிவகாந்தின் வரவேற்பை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.