பிளாஷ் பேக்: கட்டபொம்மனை கண்டு மிரண்ட தமிழ் சினிமா | காதலிக்க நேரமில்லை சந்திராவின் ரீ-என்ட்ரி! எந்த சீரியல் தெரியுமா? | கையில் கட்டுடன் கேன்ஸ் புறப்பட்ட ஐஸ்வர்யா ராய் | தாமு ஏன் வெங்கடேஷ் பட்டுடன் வரவில்லை?: புதிய தகவல் | கருப்பு பணத்தை மாற்றுகிறேனா? விமர்சனத்திற்கு பாலா பதில் | 'ஹுக்கும்' பாடலை மறப்பீர்கள் : 'தேவரா' தயாரிப்பாளர் | கங்கனா ரணாவத் சொத்து மதிப்பு எவ்வளவு? | ஏ.எல். விஜய், மாதவன் கூட்டணி பட குறித்து புதிய தகவல் இதோ! | காதலாகி, கசிந்துருகி… பிரிவாகி… - தமிழ் சினிமா பிரபலங்களின் பிரிவுகள் | யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ்? |
லூசிபர் படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் தன்னை நிரூபித்துவிட்டார் மலையாள நடிகர் பிரித்விராஜ். அதை தொடர்ந்து தற்போது மீண்டும் மோகன்லாலை வைத்தே ப்ரோ டாடி என்கிற பெயரில் தனது இரண்டாவது படத்தையும் இயக்கி வருகிறார் பிரித்விராஜ். கதாநாயகிகளாக மீனா, கனிகா ஆகியோர் நடித்துவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்சமயம் ஹைதராபத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
அங்கே தான் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படப்பிடிப்பும் நடைபெற்றது. அந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் ஜெயம் ரவி படப்பிடிப்பு முடிந்து கிளம்புவதற்கு முன்னதாக பிரித்விராஜின் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று அவரை சந்தித்துள்ளார். உடன் அவரது மனைவி ஆர்த்தியும் சென்றுள்ளார். அந்தப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த நடிகை கனிகாவும் இவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.