ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல தெலுங்கு நடிகை ரேணு தேசாய். தமிழில், ஜேம்ஸ்பாண்ட் என்ற படத்தில் நடித்தார். தெலுங்கில் நடிக்கும்போது உடன் நடித்த நடிகர் பவன் கல்யாணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 4 வருடங்கள் சந்தோஷமாக சென்ற அவர்கள் வாழ்க்கையில் விரிசல் விழுந்தது.
கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2013ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார்கள். பவன் கல்யாண், ரேணு தேசாய் தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஐதராபாத்தில் வசித்து வந்த ரேணு தேசாய் விவாகரத்துக்கு பிறகு சொந்த ஊரான புனேவில் செட்டிலானார்.
தற்போது ரேணு தேசாய் 2வது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். அவர் ஒருவரை காதலிப்பதையும், விரைவில் அவரை திருமணம் செய்ய இருப்பதையும் மறைமுகமாக வெளியிட்டிருக்கிறார். தனது இன்ஸ்ட்ராகிராமில் ஒரு ஆணின் கையுடன் தன் கையை இணைத்து ஒரு படம் வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் தவறான இடங்களில் அன்பை தேடினேன். இப்போது அன்பான காதலை, உண்மையான வார்த்தைகள், அர்த்தமுள்ள சைகைகள், நேர்மையான செயல்கள் மூலம் கண்டு பிடித்து விட்டேன்.” என்று கருத்து பதிவிட்டிருக்கிறார்.
அந்த ஆணின் கையில் தாமரை பச்சை குத்தப்பட்டுள்ளது. அதை வைத்து அவர் யார் என்கிற ஆய்வில் இறங்கியிருக்கிறார்கள் ரசிகர்கள்.