ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர்களில் பிருத்விராஜை பொறுத்தவரை பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது ரசிகர்களிடம் பந்தா காட்ட மாட்டார். அந்த நேரத்தில் அரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன் அவர்கள் கோரிக்கைகளையும் அந்த நேரத்தில் நிறைவேற்றவும் செய்வார்.
அப்படித்தான் சமீபத்தில் கேரளாவில் சாலக்குடி பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிருத்விராஜ். அது மறைந்த நடிகர் கலாபவன் மணியின் சொந்த ஊர் வேறு. அங்கிருந்த ரசிகர்கள் பிருத்விராஜை ஒரு பாடல் பாடும்படி வேண்டுகோள் வைத்துள்ளனர்.
அதற்கு பிருத்விராஜ் “பாடலா..? அதுவும் மணி சேட்டன் ஊரிலே நான் பாடுவதா..? அவ்வளவுதான் அந்த கடவுள் கூட என்னை மன்னிக்க மாட்டார்” என ஜகா வாங்கினார். ஆனாலும் ரசிகர்கள் விடுவதாக இல்லை என தெரிந்ததும் தான் நடித்த 'அமர் அக்பர் ஆண்டனி' படத்தில் இருந்து ஒரு பாடலை பாடி ரசிகர்களை மகிழ்வித்தாராம் பிருத்விராஜ்.