ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'தட்டத்தின் மறயத்து' படம் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த இஷா தல்வார், தொடர்ந்து சில மலையாள படங்களில் நடித்தார். தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் மலையாளத்தில் 'ரணம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
பிருத்விராஜ் ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமான மம்தா மோகன்தாஸ் விலகிக்கொள்ள அந்த வாய்ப்பு இஷா தல்வாருக்கு கிடைத்தது. இதில் டீனேஜ் பெண்ணுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். ஆனால் இந்தப்படத்தின் கதையோ, டீனேஜ் பெண்ணுக்கு அம்மாவாக நான் நடிப்பதோ எனக்கு முக்கியமாக படவில்லை என கூறியிருக்கிறார் இஷா தல்வார்.
இதுபற்றி அவரிடம் கேட்டால், இந்தப்படத்திற்காக என்னிடம் கதை சொல்லவந்தபோது அதில் பிருத்விராஜ் தான் ஹீரோ என்று சொன்னார்கள். பிருத்விராஜின் ரசிகையான நான் அவருடன் நடித்துவிட வேண்டும் என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டிருந்தேன்.. இந்தப்படம் முழுக்க வெளிநாட்டில் படமாக்கப்பட்டதும், அதில் பிருத்விராஜுடன் இணைந்து நடித்ததும் புது அனுபவமாக அமைந்தது என கூறுகிறார் இஷா தல்வார்.