ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு சினிமாவில் பாகுபலி நாயகன் பிரபாஸ் - கோபிசந்த் ஆகிய இருவரும் நல்ல நண்பர்கள். 2004-ல் சோபன் இயக்கத்தில் தெலுங்கில் உருவான வர்ஷம் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அந்த படத்தில திரிஷா நாயகியாக நடித்திருந்தார். அதையடுத்து அவர்கள் எந்த படத்திலும் இணையவில்லை.
இந்த நிலையில், தற்போது பாகுபலி-2விற்கு பிறகு சாஹோ படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். கோபிசந்த் ஆக்சிஜன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நவம்பர் 30-ந்தேதி வெளியாகிறது. இதையடுத்து மீண்டும் பிரபாசுடன் இணைந்து நடிக்க நல்ல ஸ்கிரிப்ட் தேடி வருவதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் கோபிசந்த். என்னைப்போலவே பிரபாசும் எங்களுக்கு பொருத்தமான கதை தேடிக்கொண்டு வருகிறார். அப்படி நாங்கள் எதிர்பார்க்கும் கதை ரெடியானதும் மீண்டும் இணைந்து நடிப்போம் என்கிறார் கோபிசந்த்.