ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த 2016ஆம் வருடத்திற்கான கேரளா அரசின் திரைப்பட விருதுகள் சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன. நேற்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மோகன்லால், மம்முட்டி உட்பட இன்றைய இளம் முன்னணி நடிகர்கள் வரை எவரும் கலந்து கொள்ளாதது முதல்வருக்கு வருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. அது விழாவில் அவர் பேசிய பேச்சிலும் வெளிப்பட்டது..
“இந்த விழாவிற்கு முறைப்படி, சம்பிரதாயப்படி அழைப்பு அனுப்பவில்லை என பலரும் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லையா, அல்லது கலந்து கொள்ள விருப்பம் இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. இது உங்களுக்கான விழா, இதில் நீங்களே கலந்து கொள்ளாமல் புறக்கணித்தால் எப்படி..?” என தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார் முதல்வர் பினராயி விஜயன்.
இந்த விழாவில் கம்மட்டிப்பாடம் படத்தில் நடித்த விநாயகனுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், அனுராக கரிக்கின் வெள்ளம் படத்தில் நடித்த ரெஜிஷா விஜயனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.
விழாவில் ஷோபனா, ரீமா கல்லிங்கல் ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.