ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல கன்னட இயக்குனர் பிரேம் தற்போது நடிகர் சிவராஜ் குமாரை வைத்து கன்னடத்தில் 'தி வில்லன்' என்கிற பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் மிதுன் சக்கரவர்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
தனது கனவுப்படமாக இதை உருவாக்கிவரும் பிரேமுக்கு தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இந்தப்படத்தை இயக்கி வெளியிட வேண்டும் என்பது ஆவல். கன்னடத்தை பொறுத்தவரை சிவராஜ்குமார்தான் இந்த கேரக்டருக்கு செட்டாவார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இலாததால் அவரை வைத்தே இந்தப்படத்தை துவங்கிவிட்டார்.
அதேசமயம் மற்ற மொழிகளில் சிவராஜ்குமார் நடிக்க முடியாதே. அப்போதுதான் தமிழ், மலையாள, தெலுங்கு என மும்மொழி ரசிகர்களும் ஏற்றுக்கொள்ளும் விதமாக, இந்தப்படத்தில் மோகன்லாலை நடிக்க வைக்கும் ஐடியாவை இயக்குனர் பிரேமிடம் கூறினாராம் சிவராஜ்குமார்.
அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் சிவராஜ்குமாருடன் முக்கிய வேடத்தில் நடித்து வரும் சுதீப்பும் மற்ற மூன்று மொழிகளிலும் நன்கு பிரபலமானவர் என்பதால் அவரே அந்த கேரக்டரில் நடித்தால் தான் நன்றாக இருக்கும் எனவும் சொன்னாராம் சிவராஜ்குமார். இதற்கு சந்தோஷமாக ஒப்புக்கொண்ட இயக்குனர் பிரேம், இந்தப்படத்தை முடித்த கையோடு மற்ற மொழிகளில் இயக்குவதற்கான வேலைகளை ஆரம்பிக்க இருக்கிறாராம்.